விரைவில் ஏ.சி, படுக்கை வசதியுடன் பேருந்துகள்-கே.என்.நேரு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தனியார் பேருந்துகளுடன் போட்டியிடும் வகையில் விரைவில் தமிழக அரசு விரைவுப் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி, படுக்கை வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்கவிழாவில் நேரு பேசியதாவது,

கடந்த 5 அதிமுக ஆட்சியில் 5,600 பேருந்துகள் மட்டும் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் விடப்பட்டன. ஆனால் கடந்த 12 மாத கால திமுக ஆட்சியில் இதுவரை 6,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

இனி வருடந்தோறும் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

தனியார் போக்குவரத்து நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் குளிர்சாதனவசதி, படுக்கையுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து மீண்டு ரூ.10 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

கோவை போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கி வருகிறது. தற்போது நஷ்டத்தில் இயங்கிவரும் மதுரை கோட்டம் இந்த வருடத்திற்குள் நஷ்டம் ஏற்படாத வகையில் நிவர்த்தி செய்யப்படும்.

தமிழக அரசு பேருந்துகளால் தினமும் 1 கோடி பயணிகள் பலனடைகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+