ஆசிரியை மீது பாம்பு வீசிய மாணவன்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டையில் ஆசிரியை மீது மாணவன் பாம்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பில் அறிவியல் ஆசிரியை கனகா பாடம் நடத்திக் ெகாண்டிருந்தார்.
பாடததை முடித்த அவர் மாணவர்களிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் என்ற மாணவனிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவன் மணிகண்டன் டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்த உயிரோடிருந்த தண்ணீர் பாம்பை எடுத்து ஆசிரியை கனகா மீது வீசியுள்ளான். இதனை எதிர்பாராத ஆசிரியை பயந்து அலறினார்.
இதையடுத்து அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் இல்லாத அந்த மாணவன் பாட்டியிடம் தான் வளர்ந்து வருகிறானாம். பாம்புகள் என்றால் அவனுக்கு மிகவும் இஷ்டமாம்.












Click it and Unblock the Notifications