போலி சரக்கு விற்ற 14 டாஸ்மாக் கடைகள் மூடல்!

Subscribe to Oneindia Tamil


திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் போலி மதுக்களை கலந்து விற்று வந்த 14 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 233 மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாநகரத்தில் 82 மதுக்கடைகள் உள்ளன.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு, டவுண், பாளையங்கோட்டை, சிவகிரி, திசையன்விளை, பணகுடி, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 14 மதுக்கடைகளை மூடுவதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த 14 மதுக்கடைகளையும் உடனடியாக மூடி இருப்பில் உள்ள சரக்குகளை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஆனால் மூடுவதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ஒரு சில மதுக்கடைகளில் சமீபத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார்களில் 'கட்டிங்' விற்பனை, தண்ணீர் சேர்ப்பது போன்றவை சரளமாக நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த பார்களில் போலி சரக்குகள், மிலிட்டரி சரக்குகள் விற்கப்படுவதாகவும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் தான் 14 கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+