லாரி ஸ்டிரைக்: 1 கோடி முட்டைகள் தேக்கம்
நாமக்கல்: கேரளாவில் லாரி ஸ்டிரைக் தீவிரமடைந்திருப்பதால் தொடர்வதால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பபட வேண்டிய சுமார் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இவை அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுளளனர். இதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் கேரளா முழுவதும் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்திலிருந்தும் லாரிகள் கேரளாவுக்கு செல்லவில்லை.
இதன் காரணமாக கேரளாவுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள், முட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் செல்வது தடைபட்டுள்ளது. இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழக வர்த்தகர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் ஸ்டிரைக் காரணமாக முட்டைகளை அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துளளன. இந்த முட்டைகள் அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் நஷ்டத்தை முட்டை உற்பத்தியாளர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஸ்டிரைக்கை கைவிட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் விடுத்த எச்சரிக்கையை கேரள மாநில லாரி உரிமையாளர்கள் நிராகரித்து விட்டனர். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications