For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்லப்பட்ட 21 புலிகளின் உடல்கள் புதைப்பு

By Staff
Google Oneindia Tamil News
 Bodies of black tigers (Suicide squad) killed in Anuradhapura attack
Click here for more images
கொழும்பு: அனுராதபுரம் விமானப் படை தாக்குதலைத் தொடர்ந்து நடந்த சண்டையில் கொல்லப்பட்ட 21 விடுதலைப் புலிகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் புதைக்கப்பட்டன.

அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர். அதே நேரத்தில் தரைப்படை மூலமாகவும் இலங்கை ராணுவத்தைத் தாக்கினர்.Prabhakaran paying homage to black tigers killed in Auradhapura attack

இதையடுத்து மூண்ட கடும் சண்டையில் 21 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இறந்த விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி லாரியில் போட்டு ராணுவம் எடுத்துச் சென்றது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல், ஜெனீவா ஒப்பந்தத்தை இலங்கை ராணுவம் மீறி விட்டதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Prabhakaran paying homage to black tigers killed in Auradhapura attackஇந்த நிலையில் 21 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் புதைக்குமாறு அனுராதபுரம் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் உடல்களைப் பெற்று அவற்றைப் புதைத்தனர்.

இதற்கிடையே, இறந்த விடுதலைப் புலிகளில் பலர் இலங்கை விமானப் படை வீரர்களைப் போல சீருடை அணிந்திருந்ததாகவும், அவர்களது உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை அறிவாதற்காகவே சீருடையை களைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் உடல்களை பாலிதீன் கவர்களில் போட்டு மூடி விட்டதாகவும் ராணுவம் விளக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X