பாலியல் கல்விக்கு பாடத் திட்டம் தயார்!
சென்னை: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் கல்விக்கான பாடத் திட்டம் தயாராகியுள்ளது. எப்படி இந்தப் பாடத்தை நடத்த வேண்டும் என்று தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. இதை அறிவியல் பாடம் போலவே நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பாடத்தில் பாலியல் கல்வியை சேர்ப்பது குறித்து சில தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழு நாடு முழுவதும் ெசன்று ெபாதுமக்கள், மாணவ, மாணவியர், ஆசிரியர்களை சந்தித்து கருத்தறிந்து வருகிறது.
இதுவரை சென்ற மாநிலங்களில் 11 மாநிலங்களில் பாலியல் கல்விக்கு எதிர்ப்பு இருப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், செக்ஸ் கல்வி அவசியம்தான் என்ற குரலும் ஒருபக்கம் பலமாக எழுந்துள்ளது. இதனால் அரை குறையாக தெரிந்து ெகாள்ளும் ஆபத்திலிருந்து மாணவ, மாணவியரை மீட்க முடியும், தவறுகளை தவிர்க்க முடியும் என்பது அவர்களின் வாதம்.
இந்த நிலையில் தமிழகம் மற்ற மாநிலங்களை முந்திக் கொண்டு பாலியல் கல்விக்கான பாடத் திட்டத்தை வகுத்து விட்டது, அமல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
எந்தவித விரசமான விஷயங்களும், நெளியும் வகையிலான விஷயங்கள் இல்லாமல் பக்காவாக பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம். இதுவும் அறிவியலைப் போலவே ஒரு பாடத் திட்டமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இதனை செக்ஸ் கல்வியாக இல்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, பாலியல் தொடர்பான நோய் ஆபத்துக்கள் பற்றிய பாடமாக போதிக்கப்பட இருக்கிறது. இதில் அறிவியல் ரீதியான பாடத்திட்டங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். செக்ஸ் பற்றிய விளக்கங்கள் எதுவும் இடம் பெறாத வகையில் பாடம் நடத்தப்படும்.
இந்தப் பாடத்திட்டம் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே நடத்தப்படும். இரு பிரிவினருக்கும் தனித்தனியே விளக்கப் பாடம் நடக்கும்.
9-ம் வகுப்பு பிரிவினருக்கு புதன்கிழமையும், பிளஸ்-1 பிரிவினருக்கு வியாழக்கிழமையும் என வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாடம் நடத்தப்படும்.
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு செக்ஸ் கல்வி பாடம் கிடையாது. பாடத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும், ஒரு வாரத்தில் ரெடியாகி விடும் எனவும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் கல்வி பாடத்தை மிக எளிமையாகவும், ஆரோக்கியமான முறையிலும் சொல்லித் தர 500 ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதற்காக பயிற்சி பெற்றவர்கள்.
தற்போது இவர்கள் மூலம் 40 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியை களுக்கு பாலியல் கல்வி பாடத்தை எப்படி நடத்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் இந்தப் பயிற்சி நடைபெறும். இதை முடித்த பின்னர் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் இந்தப் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும்.
தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்து 500 பள்ளிகளில் இந்தப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications