For Daily Alerts
Just In
காஷ்மீர் எல்லையில் நிலநடுக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய- சீன எல்லைப் பகுதியில் இன்று பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இன்று பிற்பகல் 12.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது.
கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும் 7.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Friday, October 26, 2007, 17:45 [IST]