தோப்புக்கு தீ - அதிமுக செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: கரும்புத் தோகைக்கு வைத்த தீ, தென்னந்தோப்பைக் கருக்கியது. இதுதொடர்பாக அதிமுக செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சிவகிரி சிவராமலிங்கபுரம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தேவிபட்டினத்தில் உள்ளது.
இதன் அருகில் தேவி பட்டிணத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. தோட்டத்தில் கரும்பு வெட்டிய பின்னர் கணேசன் அங்கு கிடந்த தோகைக்கு தீ வைத்தார்.
இந்த தீ மளமளவென பரவி அருகில் உள்ள மாரியம்மாள் தென்னந் தோப்புக்கு பரவியது. இதில் 15 மரங்கள் கருகின.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். கணேசன் தேவிபட்டினத்தில் அதிமுக கிளை செயலாளராக உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications