தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளம்
குற்றாலம்: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பருவமழை பலமடைந்துள்ளது.
இம்மழையின காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அடவி நயினார் அணைகள் நிரம்பி வழிகிறது.
செங்கோட்டை பகுதியில் 66மி மீ மழை பதிவாகியுள்ளது.தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இம்மழையின் காரணமாக அம்பை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பாதிப்படைந்துள்ளது. புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications