For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடுவாஞ்சேரி-லாரி மீது பேருந்து மோதி 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்தனர். இதனால் கூடுவாஞ்சேரி பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6.30 மணிக்கு அந்தப் பேருந்து கூடுவாஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது மரக்கட்டைகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்ற ஒரு லாரி பழுதடைந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் 3 பேர் பலியானார்கள். பேருந்தின் நடத்துனர் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர்.

போலீஸார் விரைந்து வந்து பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X