பள்ளி மாணவியை கடத்திய 4 பேருக்கு 7 ஆண்டு சிறை!
மதுரை: பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் முத்துச்சாமி. இவர்களது உறவினர் மகள் ராதிகா மதுரையில் ஒரு பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார்.
மாணிக்கம் தனது மகன் முத்துச்சாமிக்கு மாணவி ராதிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு ராதிகாவின் பெற்றோர் மாணிக்கம் குடும்பத்தினர் ராதிகாவை கடத்தினர்.
தனது மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் ராதிகாவை அருப்புக்கோட்டையில் வைத்து மீட்டனர்.
ராதிகாவை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற முத்துச்சாமி, அவரது தந்தை மாணிக்கம், தாய் தேவிகா, உறவினர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஞானய்யை முத்துச்சாமி, மாணிக்கம், தேவிகா, மணி ஆகியோருக்கு 7 வருட கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications