நாளை முதல் திருச்சி-பெங்களூர் விமான சேவை ரத்து!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி-பெங்களூர் இடையேயான தனது விமான சேவை கிங் பிஷ்ஷர் நிறுவனம் நாளை முதல் ரத்து செய்யவுள்ளது.
திருச்சி-பெங்களூர் இடையே தினமும் விமானத்தை இயக்கி வந்தது கிங்பிஷர் நிறுவனம். இந் நிலையில் திடீரென நாளை முதல் இந்த சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல திருச்சி-சென்னை இடையிலான ஏர்-டெக்கான் விமான சேவையின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஏர்-டெக்கான் விமானம் சென்னையிலிருந்து காலை 10.20க்குப் புறப்பட்டு 11.20க்கு திருச்சி வந்தடையும். திருச்சியிலிருந்து மீண்டும் காலை 11.35க்குப் புறப்பட்டு 12.45க்கு சென்னையை அடையும்.












Click it and Unblock the Notifications