பாஜக பிரமுகரின் 2வது மனைவியை 'அபகரித்த' போலீஸ்காரர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாஜக பிரமுகரின் 2வது மனைவியை காவல்துறையை சேர்ந்தவர் அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி. இவர் அம் மாவட்டத்தின் முக்கிய பாஜக பிரமுகர். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி. அவரது தங்கை ராஜலட்சுமியையும் கிருஷ்ணமூர்த்தி 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த தனசேகரன் சென்னை காவல்துறையில் விஐபிக்கள் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தின் முக்கிய விஐபி ஒருவரின் பாதுகாப்புக்காக புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கு தனசேகரனுக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுவிட்டது.
தனசேகரன் சென்னை திரும்பிவிட்ட நிலையில் திடீரென ராஜலட்சுமியும் காணாமல் போனார்.
இது குறித்து தனது கிருஷ்ணமூர்த்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் தனசேகரனுடன் ராஜலட்சுமி ஓடிப் போனது தெரியவந்துள்ளது.
அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications