உல்லாசத்து வர மறுத்ததால் பெண் மற்றும் குழந்தைகளை எரித்து வாலிபர் தற்கொலை
சென்னை: அடுத்தவரின் மனைவி உல்லாசத்து வர மறுத்ததால் அவரையும், அவருடைய குழந்தைகளையும் உயிரோடு எரித்து விட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்துள்ள பொன்னேரி அருகில் உள்ள திருவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (30). இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டதால் தனது உறவுக்கார பெண் அனிதாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். இதற்கிடையில் அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்ததாக ஏழுமலை மீது பலமுறை வழக்குகள் பதிவாயின. போலீசாரால் கைது செய்யப்பட்டு பலமுறை சிறைக்கு சென்றுள்ளார் ஏழுமலை.
இந் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வேலாயுதம் என்பவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்துள்ளான் ஏழுமலை. கணவர் வெளியில் போய்விட்ட நிலையில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ருக்மணியை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளான்.
இதையடுத்து உதவி கேட்டு ருக்மணி சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து ருக்மணி மற்றும் அவரது குழந்தைகளின் மீது ஊற்றி தீ வைத்தான் ஏழுமலை.
இதில் அவர்கள் அலறியபடி எரிவதைப் பார்த்து தானும் தீ வைத்து கொண்டான் ஏழுமலை.
அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அனைவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ஏழுமலை இறந்துவிட்டான்.
ருக்மணி மற்றும் அவரது குழந்தைகள் சந்துரு (8) மற்றும் சுந்தரி (6) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications