தமிழக தொழிலாளி மஸ்கட்டில் சாவு

Subscribe to Oneindia Tamil


புளியங்குடி: மஸ்கட்டில் வேலைக்கு சென்ற தமிழக கூலி தொழிலாளி இறந்து ஒரு வாரம் ஆகியும் உடல் வந்து சேராததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

புளியங்குடி அருகே அய்யாபுரம் அன்னை இந்திரா தெருவை சேர்ந்த யோவான் மகன் பாலு. கல்லுடைக்கும் கூலி தொழிலாளியான இவர் மஸ்கட்டில் வேலைக்குச் சென்றார்.

அங்கு இவரும் அதே ஊரை சேர்ந்த நண்பர் வேல்துரை என்பவரும் ஓரே அறையில் தங்கியுள்ளனர். கடந்த 20ம் தேதி பாலுவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்ல பணமில்லாமல் தடுமாறிய அவர் இறந்து விட்டார்.

இதையடுத்து அய்யாபுரத்தில் உள்ள பாலு குடும்பத்திற்கு அவர் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் இரு தினங்களில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் அவரது உடல் வருவதில் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து பாலுவின் மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

இறந்து போன பாலுக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், சிபு, ரமேஷ் ஆகிய 2 மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+