ஜார்கண்டில் நக்சல்கள் சுட்டு 17 பேர் படுகொலை

Subscribe to Oneindia Tamil


ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் முன்னாள் முதல்வரின் மகன் உட்பட 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் கிரிதி மாவட்டத்தில் உள்ள சில்காடியா என்னும் கிராமத்தில் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த கலை நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மாரண்டியின் மகன் அனுப் மாரண்டி கலந்து கொண்டார்.

இவருடன் சேர்ந்து இவரது ஆதரவாளார்கள் உட்பட ஏராளமானோர் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேற்று நள்ளிரவு 1 மணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கலை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட நக்சல் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்து நிகழ்ச்சியை முன் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

நக்சல் தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலையடுத்து கலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதில் முன்னாள் முதல்வரின் மகன் அனுப்மாரண்டியை அவரது ஆதரவாளர்கள் தூக்கிக் கொண்டு ஓடினர்.

ஆனால் நக்சலைட்டுகள் கையெறி குண்டுகளை அனுப் மாரண்டி மீது வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

இத் தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 3 பேர் இறந்துவிட்டனர்.

தாக்குதல் நடந்த வந்த நக்ஸல்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+