திருப்பதி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருமலா: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் திடீரென்று இறந்தார்.
பெங்களூரை சேர்ந்தவர் நாகேந்திரப்பா (48). இவர் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார்.
சுதர்சன் தரிசன வரிசையில் டிக்கெட் எடுத்து காத்திருந்தார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கோவில் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நாகேந்திரப்பா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications