For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்சல் தாக்குதல் 18 பேர் பலி: ஜார்க்கண்ட்டில் பந்த்

By Staff
Google Oneindia Tamil News

ராஞ்சி: முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்ளிட்ட 18 பேர் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான சம்பவத்தைக் கண்டித்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை ஸ்தம்பித்தது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடித் மாவட்டத்தில் நடந்த நக்சலைட் தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைக் கண்டித்து ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது. அனைத்துப் பகுதியிலும் பந்த் முழு அளவில் நடந்து வருகிறது. இருப்பினும் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.

அனைத்து சாலைகளும் வாகன ஓட்டமின்றி முடங்கியுள்ளன. ரயில்கள் ஓடவில்லை. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நக்சலைட் தாக்குதல் நடந்த கிரிடித் மாவட்டத்திலும் அமைதியான முறையில் பந்த் நடந்தது.

லோஹர்தாகா என்ற இடத்தில் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இறுதியில், முதல்வர் மது கோடாவிந் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

தான்பாத், ஜாம்ஷெட்பூர், பொகாரோ, டால்டன்கஞ்ச், தும்கா, கொடெர்மா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X