அரசுப் பேருந்து - லாரி மோதலில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலூர் மாவட்டம் திருவலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் ஆனந்தபூருக்கு அரசுப் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து வேலூர் மாவட்டம் திருவலம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே காய்கறிகளை ஏற்றி சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மோதியது.
இதில், லாரியில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.
லாரி டிரைவர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications