For Daily Alerts
Just In
கன மழையால் தண்ணீரில் மிதக்கும் சென்னை
சென்னை: சென்னை நகரில் பெய்து வரும் கன மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்த மழை நேற்று நள்ளிரவு வரை பெய்தது. இன்று காலை வரை தூரல் தொடர்ந்தது.
நுங்கம்பாக்கத்தில் 11.82 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 11.67 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேளச்சேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகள் நீரில் மூழ்கிவிட்டதால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு சேரிப் பகுதிகளில் குடிசைகள் மூழ்கிவிட்டன. இதையடுத்து அப் பகுதி மக்கள் சமூக நலக் கூடங்களிலும், கல்யாண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:00 [IST]