ஏட்டுகளுக்கு எஸ்.ஐகளாக பதவி உயர்வு!

Subscribe to Oneindia Tamil


சென்னை: தமிழகம் முழுவதும் 46 தலைமைக் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

காவல் துறையில் ஏட்டுகளாக பணியாற்றி வருபவர்கள் எஸ்.ஐஆக வேண்டுமென்றால் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி, எழுத்து தேர்விலும் வெற்றி பெறவேண்டும் என்று விதிகள் வகுத்து இருந்தது.

இந்த விதிகளை தளர்த்தக் கோரி தலைமைக் காவலர் கிரேடு போலீசார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் 10 ஆண்டுகள் தண்டனை ஏதும் இல்லாமல் பணியாற்றி வரும் ஏட்டுகளை எஸ்.ஐகளாக பதவி உயர்த்த வேண்டும் என கோரி வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு ஏட்டுகளுக்கு எஸ்.ஐ யாக பதவி உயர்வு அளித்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் 15 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 7 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஏட்டுகளுக்கம் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் பிறப்பித்துள்ளார். இதே போல பிற மாவட்டங்களிலும் பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+