பேருந்து-கார் மோதலி 3 பெண்கள் பலி
தாராபுரம்: தாராபுரத்தில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நிதி நிறுவன அதிபரின் மனைவி உட்பட 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல், பழனிகவுண்டன்குளத்தை சேர்ந்தவர் நடராஜ். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஜவுளி எடுப்பதற்காக ஈரோட்டிற்கு காரில் சென்றனர்.
அவர்களுடைய கார் இன்று காலை தாராபுரம் ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே நிதி நிறுவன அதிபர் மனைவி பிரேமா உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காரின் டிரைவர் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் வந்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications