நந்திகிராம் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பந்த்
கல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்கத்தில் பந்த் அனுஷ்டிக்கப்பட்டது.
நந்திகிராமில் கடந்த வாரம் நடந்த பெரும் மோதல் மூண்டது, துப்பாக்கிச் சூடும் நடந்தது. இதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மயிரிழையில் உயிர் தப்பினார். தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் பந்த் நடத்த மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று பந்த் நடத்தப்பட்டது.
இதனால் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் சேவைகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டன. ஹவுரா மற்றும் சீல்த் ஆகிய இடங்களுக்கு செல்லவேண்டிய ரயில்கள் இயங்கவில்லை. பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆட்டோ, டாக்ஸி, பஸ், லாரி எதுவும் இயங்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பந்த்தால் ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுக்க 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு பந்த் நடத்தியதற்காக மம்தா பானர்ஜி மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்னொரு பந்த்தை நடத்தியுள்ளார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications