இந்திரா நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 23ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 23வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி உட்பட ஏராளமான தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், காங்கிரஸார் மலர்
வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழகத்தில் ..
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா படத்திற்கு மாலை அணிவித்தனர்.
சென்னை நகரில் உள்ள இந்திரா காந்தி சிலைகளுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் உள்ள இந்திரா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஏழை, எளியோருக்கு அன்னதானம், நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.