For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோர்ட்டில் தேமுதிக பிரமுகருக்கு கத்திக் குத்து!

By Staff
Google Oneindia Tamil News


திண்டிவனம்: திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக பிரமுகர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிகவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கொலை வழக்கு தொடர்பாக திண்டிவனத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.

நீதிமன்ற வளாகத்திற்குள் அவர் நுழைந்தபோது 2 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் ெகாண்டு சென்றனர்.

ராஜாவின் உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X