நாளை சேலம் கோட்டம் உதயம்: பொள்ளாச்சியில் வைகோ உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil


சேலம்&பொள்ளாச்சி: கேரளம் உருவாக்கிய ஏகப்பட்ட பிரச்சனைகளுக்குப் பின் அமைக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் முதல்வர் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.

சேலம் ரயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு சேலம் கிழக்கு ரெயில்வே காலனி மைதானத்தில் நடக்கிறது.

இந்த கோட்டத்திற்காக தற்காலிக அலுவலக கட்டிடங்கள் மற்றும் சிக்னல் கட்டுப்பாட்டு அறை போன்றவை அமைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தொடக்கவிழா பணிகளை ரயில்வே இணையமைச்சர் வேலு நேற்றிரவு ஆய்வு செய்தார்.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு 862 கிலோ மீட்டர் ரயில் பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் பணியாற்றுவதற்காக 341 பணியாளர்களுக்கு இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி-கிணத்துக்கடவு ஆகிய தமிழக ரயில்வே பகுதிகள் (சுமார் 71 கி.மீ. ரயில் பாதை) கேரளத்தின் பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன. இதை சேலம் கோட்டத்துடன் இணைக்க தமிழக தலைவர்கள் எடுத்த முயற்சிகளை கேரளம் முறியடித்துவிட்டது.

வைகோ உண்ணாவிரதம்:

இந் நிலையில் நாளை சேலம் கோட்டம் தொடக்கவிழா நடைபெறும் அதே நேரத்தில் பொள்ளாச்சி-கிணத்துக்கடவு ஆகிய ரயில்வே பகுதிகள் கேரளத்திற்கு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளார்.

பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதை மதிமுக பொருளாளர் கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். இதில் மதிமுகவினர் கருப்புச் சட்டைகளுடன் பங்கேற்கவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+