மீன் மார்க்கெட்டில் வியாபாரி அடித்து கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வாய் தகராறு காரணமாக மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருவிதாங்கோடு, ஆலடிகுன்னு காலனியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவர் வடசேரி மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இரவு இப்ராகிம் மீன் மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மத்திய பிரதேசம் அகர்தலா பகுதியை சேர்ந்த பிரதீப் மீன் மார்க்கெட்டுக்கு வந்தார். அவர் இப்ராகிம் கையில் வைத்திருந்த பணத்தை தருமாறு கேட்டார். அதற்கு இப்ராகிம் பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் இப்ராகிமுக்கும், பிரதீப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீப் தான் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் இப்ராகிமை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறிய இப்ராகிம் சுருண்டு கீழே விழுந்து விட்டார்.
பின்னர் பிரதீப் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இப்ராகிமை அங்கிருந்தவர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இப்ராகிம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவர் சிகிச்சை பலனின்றி இப்ராகிம் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
தலைமறைவான பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மீன் மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.