மேட்டூரில் கூடுதல் நீர் திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டில் நான்கு மாதங்களில் 7 முறை நிரம்பி சாதனை படைத்துள்ளது மேட்டூர் அணை.
தற்போது மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையிலிருந்து ஏற்கனவே விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நீர் திறக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக தஞ்சை, திருச்சி, திருவாரூர், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications