தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்டு ஊர் திரும்பிய 3 தமிழர்கள்
வடக்கன்குளம்: நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த 3 தமிழர்களும் நேற்று இரவு சொந்த ஊர் திரும்பினர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த வினோத், மோகன்தாஸ் மற்றும் அஜீத் காமராஜ். இவர்கள் மூன்று பேரும் நைஜீரியாவில் உள்ள இத்தாலி நாட்டு எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் உள்பட 10 தொழிலாளர்கள் நடுக் கடலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தீவிரவாதிகள் தமிழர்கள் 3 பேர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேரைக் கடத்திச் சென்றனர்.
அவர்களை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 200 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டினர். இதையடுத்து இத்தாலி நிறுவனம், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய அரசுத் தரப்பிலும் இந்தியர்கள் நால்வரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு இத்தாலி நிறுவனம் ரூ. 28 கோடி பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் அவர்கள் கடத்திச் சென்ற 6 பேரையும் விடுவித்தனர்.
தீவிரவாதிகள் பிடியிலிருந்த மீண்ட மூன்று தமிழர்களும் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி தாங்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் நைஜீரியாவிலிருந்து துபாய் வழியாக திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உணர்ச்சிப்பெருக்குடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து வடக்கன்குளத்திற்கு மூன்று பேரும் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை ஊர் மக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகள் வெடிக்க, உற்சாகமாக வரவேற்றனர்.
3 பேரையும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். பிறகு அவர்கள் கூறுகையில், தங்களைத் தீவிரவாதிகள் எந்த சித்திரவதையும் செய்யவில்லை என்றும், தாங்கள் வேலை பார்த்து வரும் இத்தாலி நிறுவனம் பணம் கொடுத்து தங்களை மீட்டதாகவும் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் வந்தனர், அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினர், சித்திரவதை செய்யவில்லை, நிறுவனம் பணம் கொடுத்து தங்களை மீட்டதாக தெரிவித்தனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications