பஞ்சாபில் சாலை விபத்தில் 7 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம், தரண்தரண் மாவட்டத்தில் உள்ள புச்சார் என்ற கிராமம் அருகே வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதாளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியானார்கள்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தில்பக்சிங், அவருடைய மனைவி பரம்ஜீத் கவுர் மற்றும் அவர்களுடைய இரு குழந்தைகளும் அடங்குவர்.












Click it and Unblock the Notifications