திருச்சியில் இலங்கை அகதி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை என்ற இடத்தில் இலங்கை அகதிகளுக்கான முகாம் உள்ளது.
இந்த முகாமுக்கு அருகே உள்ள குளத்தின் கரையில் குமார் என்ற அகதி இன்று காலை பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.
விரைந்து வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்த குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
அகதிகள் முகாமில் உள்ள இரு பிரிவினருக்கும், குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில்தான் குமார் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications