திருச்சி தி.க கூட்டத்தில் ராமர் வாழ்க கோஷம்
திருச்சி: திருச்சியில் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் ராமர் வாழ்க, சேது சமுத்திர திட்டம் ஒழிக என்று கோஷம் எழுந்ததால் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகர திராவிட கழகம் சார்பில் சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர திக தலைவர் சேகர் தலைமை தாங்க செயலாளர் செந்தமிழ் இனியன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் சேது சமுத்திர திட்டம் மற்றும் அதனுடைய பயன்கள் குறித்து தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த பொதுக்கூட்டத்தை ஏராளமானோர் நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ராமர் வாழ்க, சேது சமுத்திர திட்டம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்.
இதனால் தி.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தி.க நிர்வாகிகள் அந்த வாலிபரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications