For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் திமுக அமைச்சர் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அந்தியூர் செல்வராஜ். இவர் மீது கடந்த அதிமுக ஆட்சியில், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 63 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

அவர் தவிர அவரது மனைவி பாப்பாத்தி செல்வராஜ், மகன் பரமசிவம், மகள் கஸ்தூரி ஆகியோர் மீதும் ஈரோடு தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அந்தியூர் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்து நீதிபதி கோவிந்தராஜுலு தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X