For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னல் தாக்கி 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழைக்கு ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இடி, மின்னல் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

வி.கே.புரம் அனவன் குடியிருப்பைச் சேர்ந்தவர்களான காளிமுத்து, நடராஜன், சுடலை மணி ஆகியோர் அதே குடியிருப்பை சேர்ந்த சிவன் பாண்டியன் என்பவரது வயலில் உழுது கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் உழுது கொணடிருந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதே போன்று வி.கே.புரம் அருகே உள்ள காக்காநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி மகன் வேல்முருகன். இவர் நேற்று காலை தனது தம்பி பாண்டியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

பின்னர் இருவரும் அங்குள்ள கடனாநதியில் குளிப்பதற்காக சென்றனர். வேல்முருகன் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். தனது அண்ணன் காணாமல் போனது குறித்து பாண்டி கொடுத்த தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசாமி தலைமையில் வீரர்கள் வேல்முருகன் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.

இதேபோல் ராதாபுரம் தாலுகா கூட்டபுளியை சேர்ந்தவர் பச்சலி. இவரும் இதே பகுதியை சேர்ந்த ரெபின்டோ, வின்சென்ட் ஆகிய மூன்று பேரும் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது அதிகாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் இடி தாக்கியதில் மீன் பிடித்து கொணடிருந்த பச்சலி சம்பவ இடத்திலேயே பலியானார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X