ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 உயர்வு!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து தங்க நகை விரும்பிகளை அதிரச் செய்துள்ளது.
கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை சற்று இறங்கு முகமாக இருந்தது. ஆனால் பங்கு சந்தை விலை ஏற்றத்தாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயரத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக பவுனுக்கு ரூ.50, 60 என அதிகரித்தது. நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிமணிகள் எடுப்பது போலவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளிலும் கூட்டம் அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று வரை பவுன் ரூ.7,616 ஆக இருந்த ஆபரண தங்கத்தின் விலை, இன்று காலை கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளதால் பண்டிகை தினத்தன்று நகை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றவர்கள் அதிர்ந்து போயினர்.












Click it and Unblock the Notifications