For Daily Alerts
Just In
நின்ற ரயில் மீது இன்னொரு ரயில் மோதல்-பயணிகள் தப்பினர்
அலகாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது இன்னொரு ரயில் மோதியது.
நேற்று இரவு நடந்த இச் சம்பவத்தில் ஒரு ரயிலின் கார்ட் படுகாயமடைந்தார்.
நின்று கொண்டிருந்த புனே-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது உஜ்ஜயன்-ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் பின் பக்கமாக வந்து மோதியதில் கார்ட் அமரும் கேபின் முழுமையாக நசுங்கிவிட்டது.
ரயில் மெதுவாக வந்து மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு அல்லது ரயில் என்ஜினின் டிரைவரின் தவறால் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Story first published: Friday, November 9, 2007, 11:16 [IST]