புலிகள்-ராணுவம் கடும் சண்டை: 80 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் முகமலை பகுதியில் நடந்த கடும் சண்டையில் ராணுவ வீரர்கள் உள்பட 80 பேர் பலியானார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.
இந்த நிலையில் முகமலை பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடும் சண்டை நடந்து வருகிறது. முகமலை ராணுவ நிலைகள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. ராணுவத் தரப்பில் 11 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், புலிகள் தரப்பிலும் உயிர்ப் பலி அதிகம் என்று கூறப்படுகிறது. 69 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இப்பகுதியில் சண்டை நடந்து வருவதால் பதட்டம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications