For Quick Alerts
For Daily Alerts
Just In
விருத்தாச்சலம் அகல ரயில் பாதை திறப்பு
திருச்சி: விருத்தாச்சலம் - சேலம் அகல ரயில் பாதை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சரக்கு ரயில்கள் இந்த பாதையில் ஓடத் தொடங்கியுள்ளன.
விருத்தாச்சலம் - சேலம் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்தும் அது தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இப்பாதை ரயில் போக்குவரத்துக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் சிட்டி என்று பெயரிடப்பட்ட சரக்கு ரயில் நேற்று இப்பாதையில் முதல் ரயிலாக ஓடத் தொடங்கியது. பிலாய் இரும்பு ஆலைக்கு இந்த ரயில் 20 காலிப் பெட்டிகளுடன் சென்றது.
சேலம் ரயில் கோட்டம் உருவான பின்னர் முதன் முதலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதல் அகல ரயில் பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:42 [IST]