பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக்!
Subscribe to Oneindia Tamil
கோழிக்கோடு: மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் டிசம்பர் 12ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும், ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், பதவி உயர்வில் காணப்படும் தாமதத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கோழிக்கோட்டில் நடந்த பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒரு நாள் ஸ்டிரைக்குக்கு முன்பாக, நவம்பர் 21ம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications