எலிக் கறி தின்ற 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: வயலில் திரிந்த எலிகளைப் பிடித்து சமைத்துச் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உளுத்தூர் என்ற கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சிலர் வயலில் திரிந்த எலிகளைப் பிடித்து சமைத்து அதன் கறியைச் சாப்பிட்னர்.
இதையடுத்து எலிக் கறி சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். இதையடுத்து அவர்களில் 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவர் சேத்தியாத் தோப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
எட்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இவர்கள் எலிக்கறியைச் சாப்பிட்டனர் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications