For Daily Alerts
Just In
பேரன் பட்டாசு வெடித்ததில் பாட்டி பரிதாப சாவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 6 வயது சிறுவன் வெடித்த பட்டாசு பட்டு, அந்த சிறுவனின் 70 வயது பாட்டி பரிதாபமாக இறந்தார்.
வந்தவாசி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (70). இவரது மகள் ரமணி. இவர் தனது மகன் வினோத்துடன் (6), தனலட்சுமி வீட்டில் வசித்து வருகிறார்.
தீபாவளி தினத்தன்று, சிறுவன் வினோத் தனது பாட்டி வீட்டு முன்பு பட்டாசு வெடித்தான். அப்போது சர வெடி ஒன்று பலத்த சப்தத்துடன் தனலட்சுமி மீது விழுந்து வெடித்தது. இதில் முகம், உடல் கருகி தனலட்சுமி படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:41 [IST]