தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்-சென்னையில் வைகோ, நெடுமாறன் பங்கேற்கும் ஊர்வலம்
சென்னை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப் படை தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும் வரும் 12ம் தேதி சென்னையில் மெளன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் சார்பில் நடக்கவுள்ள இந்த ஊர்வலம் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே முடிவடையும்.
இந்த ஊர்வலத்துக்கு தமிழக விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமத், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளனரா என்று தெரியவில்லை.
இந் நிலையில் இந்த ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி வழங்க கூடாது என தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications