மக்கள் டிவி நிருபர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில், மக்கள் டிவி நிருபரை, தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் டிவியில் நிருபராக இருப்பவர் அப்ரோஸ் (30). இவர் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த இருவர் சரமாரியாக தாக்கினர்.
படுகாயமடைந்த அப்ரோஸ், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார்.
இந்த சம்பவத்தை கடலூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக பரூக் கான், ரபீக் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications