ஸ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு மிரட்டல் - பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் பெரியார் சிலை குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதால் சிலைக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் அங்கு விரைந்து சென்று சிலை உள்ள பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலை உள்ள பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications