குடித்தால் 'குண்டக்க மண்டக்க' பிள்ளை!
நியூயார்க்: கர்ப்பிணிப் பெண்கள், மது அருந்தினால் அவர்களுக்கு மோசமான குணாதிசயங்களுடன் குழந்தை பிறக்கும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழக ஆய்வாளரான பேராசிரியர் பிரையன் டி ஓனோபிரியோ தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரையன் கூறுகையில், கர்ப்ப காலத்தில் எந்த அளவுக்கு குடித்தால் பாதுகாப்பானது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், கர்ப்ப காலத்தின்போது மது அருந்தும் பெண்களுக்கு மோசமான பழக்க வழக்கங்களைக் கொண்ட குழந்தைகள் பிறக்கும் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மது அருந்தும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையில்லாத பல கெட்ட பழக்கங்கள் உண்டாகும். யாரையும் மதிக்க மாட்டார்கள். மோசமாக பேசுவார்கள், நடந்து கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதைத் தவிர்க்க கர்ப்ப காலத்தின்போது மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றார் அவர்.
மதுப் பழக்கம் உடைய பெற்றோருக்குப் பிறந்த. 4 முதல் 11 வயது வரையிலான 8600 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குழந்தைகளிடம் அடுத்தவரை அடிப்பது, உதைப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, மரியாதை செலுத்தாமல் இருப்பது போன்ற குண நலன்கள் இருப்பது தெரிய வந்தததாக பிரையன் மேலும் கூறினார்.












Click it and Unblock the Notifications