1,300 ரூபாய்க்காக பாட்டி, பேத்தி கொலை

Subscribe to Oneindia Tamil

நரசிங்பூர்: மத்தியபிரதேசத்தில் டிராக்டர் வாடகைக்கு எடுத்த பாக்கி பணத்தை கொடுக்காததால் பாட்டியையும், பேத்தியையும் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மத்தியப்பிரதேசம், நரசிங்பூரில் உள்ள லாலடோலா கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (60). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அதற்கான வாடகைப் பணம் ரூ.1,300 ஐ அவர் தரவில்லையாம்.

இந்நிலையில் இன்று காலை தங்களது விவசாய நிலத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் அவரது பேத்திகள் பார்வதி (11), பகவதி (12) ஆகியோரை அந்த டிராக்டரின் டிரைவர் முகேஷ் என்பவர் வாடகை பணத்திற்காக கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

முகேஷ் தாக்கியதில் சாந்தியும் அவரது பேத்தி பார்வதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டர் டிரைவர் முகேஷை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+