For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடு புகுந்து போலீஸ்காரர் தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல்!

By Staff
Google Oneindia Tamil News
Karur road block
Click here for more images
கரூர்: கரூரில் நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ்காரர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் திமுக பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக இருப்பவர் பழனிசாமி. இவர் நேற்று இரவு 12 மணியளவில் லைட்ஹவுஸ் பாலம் வழியாக கரூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அவரிடம் இருந்த பணம், செல் போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

இது குறித்து அவர் உடனே திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள திருமாநிலையூர் என்ற பகுதிக்கு போலீஸார் சென்றனர். அங்கு பரமத்தி காவல் நிலைய போலீஸ்காரர் வெற்றி என்பவர் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை அடித்து உதைத்துள்ளார். அதில் கிருஷ்ணமூர்த்தி கால் முறிந்தது.

மேலும், அவரது சகோதரர் கண்ணன், உறவினர் மணிமேகலை ஆகியோரையும் அடித்து உதைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வெற்றி வந்த மோட்டார் சைக்கிளை சிறை பிடித்னர். மேலும் வெற்றியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி இன்று காலை கரூர் - திருச்சி சாலையில், சாலை மறியல் செய்தனர். இனால் அந்த பகுதியில் போகுவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்த பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர். அதன் பின்பு வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X