மேற்கு வங்கம்-வங்க தேசத்தை தாக்கவுள்ள புயல்
விசாகப்பட்டனம்: 'சிதர்' என பெயரிடப்பட்டுள்ள அதி தீவிரப் புயல் மேற்கு வங்கம்-வங்க தேச எல்லையில் உள்ள சாகர் தீவு அருகே வரும் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தப் புயலால் அந்தமானுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. போர்ட் பிளேருக்கு வட கிழக்கில் புயல் தற்போது மையம் கொண்டிருந்ததால் மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்தப் புயல் மெதுவாக வங்க தேச-மேற்கு வங்க எல்லையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரிசா மற்றும் மேற்க வங்க மாநில கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
விசாகப்பட்டனம், மசிலிப்பட்டனம், கிருஷ்ணாபட்டனம், நிஜாம்பட்டனம் ஆகிய ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இங்குள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காக்கிநாடா துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications