பளு தூக்கும் வீராங்கனைக்கு ரூ. 20 லட்சம் பரிசு
புதுச்சேரி: பளு தூக்கும் வீராங்கனை மகேஸ்வரியின் சாதனையை பாராட்டி புதுச்சேரி அரசு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்துள்ளது.
பளு தூக்கும் வீராங்கனையான மகேஸ்வரி புதுச்சேரியை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய உள் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
அவரை பாராட்டும் விதமாக புதுச்சேரி அரசு ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. அந்தப் பரிசை மாநில விவசாயத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் அவருக்கு வழங்கினார்.
நெட்டப்பாக்கத்தில் மகேஸ்வரி படித்து வரும் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையையும் அமைச்சர் வழங்கினார்.
மகேஷ்வரி, அமைச்சர் வைத்தியலிங்கத்தின் நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications