துபாயில் வேலை வழிகாட்டி முகாம்
துபாய்: டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் சர்வதேச இந்திய பள்ளியும் இணைந்து இன்றும் 16ம் தேதியும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்களை நடத்தவுள்ளன.
துபாயில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் சர்வதேச இந்திய பள்ளியும் இணைந்து நடத்தும் இந்த முகாம்களை இந்தியத் தூதர் எம்.ஓ.எச்.பரூக் தொடங்கி வைக்கிறார். இரு பள்ளிகளின் வளாகங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும்.
இந்தியாவிலிருந்து பனஸ்தாலி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆதித்யா சாஸ்திரி, பெங்களூர் தயானந்த் சாகர் கல்வி நிறுவன குழும மூத்த துணைத் தலைவர் ஆர்.ஜனார்த்தனன், மங்களூர் பி.ஏ பொறியியல் கல்லூரி பயோடெக்னாலஜி துறை தலைவர் பேராசிரியர் முகம்மது ஆசிப் ஹூசேன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
14ம் தேதி இரவு 7.15 மணிக்கு டெல்லி பப்ளிக் பள்ளியில் நடைபெறும் முகாம் தொடர்பான விவரங்களை அறிய முகம்மது கலாம் (0533655635) என்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.
16ம் தேதி சர்வதேச இந்திய பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாம் மாலை 5.39 மணிக்கு, மகளிர் பிரிவு ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் இந்த பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.